நிரை இணையதள திறப்புவிழா உரை
நண்பர்களே, என்னுடைய பதின்ம வயதில் ஆச்சார கோவை என்ற நூல் ஒன்றை வாசித்தேன். நடைமுறை வாழ்ககையிலே தினசரி பின்பற்ற வேண்டிய விதிகளைச் சொல்லிக் கொடுக்கும் ஒரு நெறிநூல். இந்த நூல் எப்படி என் கைகளுக்கு வந்தது என்பதைத் தான் இங்கு சொல்ல வந்தேன். நவீன தமிழ் இலக்கியத்தை இன்னும் அறிந்திறாத பருவத்தில் எனக்கு உதவியது Project Madurai.தமிழின் சங்ககால, பக்தி இலக்கிய நூல்களின் தொகை இங்குள்ளது. எங்கிருந்தும் pdf முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒரு பருவத்திற்குப் பின், தமிழ் நவீன இலக்கியத்திற்கும் - உலக இலக்கியத்திற்கும் ஒரே சமயத்தில் அறிமுகமானேன். தமிழ் நவீன இலக்கிய சிறுகதைகளை வாசிக்க அழியாச்சுடர்கள் இணையதளம் ஓர் அவசியமானது. உலக இலக்கிய செவ்வியல் பட்டியல் என்ற ஒன்றைத் தொகுத்தால், அதிலிருக்கும் அனைத்து நூல்களும் Project Gutenberg என்ற இணையத்தளத்தில் கிடைக்கும். ஆனால், நமக்கு மிகவும் பரிட்சயம் என நினைத்துக் கொண்டிருக்கும் மலேசிய நவீன தமிழிலக்கியம் வாசிப்பதற்கு அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. அதற்கு இரு காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, ஏற்கனவே...


